Sunday, June 28, 2020

கொரானா

எல்லாமும் மாறித்தான் போகும் இந்த உலகத்திலே!
நல்லோரும், அல்லாரும்,  இல்லாரும் உள்ளோரும்,
எல்லோரும் மாறித்தான் போவார் இந்த பூமியிலே!
யார் மனத்தில் எதுவென்று யாருக்குத் தெரியும்?
யாரிடத்தில் கொரோனா என்று எப்படிப் புரியும்?
நம்பிக்கையிலா உலகத்தில்நடமாடும் நமக்கு 
அவநம்பிக்கை அதிகரிக்க வந்ததே இப் பெரும் தொற்று!
மாற்றம் நிறைந்த உலகிலே மாறாததும் உண்டு!
சூரிய உதயம் மாறாது!
சுட்டிக் குழந்தை புன்னகை மாறாது!
பிறப்பவர் எப்படியும் இறப்பார் அது மாறாது!
உண்மை அன்பும் மாறாது!
உண்மை அன்பை மதித்தால் பெரு நன்மை மட்டுமே விளையும்!
அன்புள்ளவரை அடையாளம் காண கொரோனாவும் காரணமாய் அமையும்!
நேசம் செலுத்துவோம்! நேர்மையாய் இருப்போம்!
பாசம் வைப்போம் ! பலன் பெறுவோம்!
இதையும் கடப்போம் அன்பால், அறிவால்!!
வாழ்க வளமுடன்!!